Published : 14 Nov 2024 06:19 AM
Last Updated : 14 Nov 2024 06:19 AM

ப்ரீமியம்
இறுதி மரியாதை செய்யும் மனித நேயர்! | சமூகப் பொறியாளர்கள் 14

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்திலிருந்து மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்தவர் காலித் அகமது. அவருக்கு அன்று திருமணம். வாழ்வின் மிக முக்கிய மான அந்த நாளில் காலித் செய்த செயலை வேறு யாரும் செய்யத் துணிந்திருக்க மாட்டார்கள். யாராலும் உரிமை கோரப்படாமல் இரண்டு மாதங்களாகச் சவக் கிடங்கில் இருந்த சடலத்தை எடுத்து, அடக்கம் செய்துவிட்டு, உறவினர்களும் நண்பர்களும் புடைசூழ வாழ்க்கைத் துணையைக் கரம் பற்றினார் காலித் அகமது! இதை அவர் பரபரப்புக்காகச் செய்யவில்லை.

அவரே விரும்பிச் செய்த மனிதநேயச் செயல். கடந்த 2017 இல் சென்னையின் சூளைமேட்டில் அவர் தொடங்கிய ‘உறவுகள் அறக்கட்டளை’ கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழாயிரம் சடலங்களை அவரவர் மதச் சடங்கின்படி அடக்கம் செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து சடலங்களை இக்குழு அடக்கம் செய்கிறது. காலித் அகமதுவே தனது தன்னார்வலர்களுடன் சடலங்களின் அடக்கப் பணிகளைக் கவனிக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x