Published : 04 Jan 2024 06:09 AM
Last Updated : 04 Jan 2024 06:09 AM
திருவண்ணாமலையில் கேப்டன் சாமிநாதன் என்கிற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்திருப்பதைப் பெருமையாக என்னிடம் கூறுவார். ஒழுக்கத்தின் மீதும் திருக்குறளின் மீதும் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். திருவள்ளுவர் என்றால் அவருக்கு உயிர் மூச்சு. அவருடைய கடின உழைப்பின் காரணமாக எங்கள் ஊரில் திருவள்ளுவர் சிலை ஒன்று உருவானது. வேட்டவலம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு, ‘திருவள்ளுவர் அகம்’ என்று பெயர் வைத்தார். அந்த வீடு செங்கற்களால், சிமெண்டால் கட்டப்பட்டதா என்று எனக்குத் தெரியாது.
ஆனால், ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களால் கட்டப்பட்டது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். வீடு முழுவதும் குறள்களை எழுதி நிரப்பி, இன்னும் திருவள்ளுவர் உயிரோடு வந்து ஆயிரம் குறள்கள் எழுதி இருந்தால்கூடத் தன் வீட்டுச் சுற்றுச்சுவர்களில் குறளை நிரப்ப இடம் விட்டிருந்தார். பகலில் எந்தச் சாலையிலும் சைக்கிளில் காட்சி தருவார். சாக்லெட் நிரப்பிய ஒரு பையை அதில் மாட்டி வைத்திருப்பார். நாளும் பொழுதும் திருக்குறளே வாழ்வானதால், அவர் வீட்டின் மாடிமேல் ஸ்பீக்கர் கட்டி, தினந்தோறும் திருக்குறளையும் அதன் பொருளையும் காலை ஐந்து மணிக்கு ஒலி பெருக்கியில் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT