Published : 21 Dec 2023 06:00 AM
Last Updated : 21 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
காணாமல் போகும் சொற்கள் - ‘ஆவலாதி’ சொல்லலாமா?

‘ஆவலாதி’ என்கிற இந்தச் சொல்லை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வயதானவர்கள் இன்றும்கூடப் பயன்படுத்தலாம். மக்களின் மிக நுட்பமான உணர்வுகளை, மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்தும் வழியாக ‘வட்டார வழக்குகள்’ இருந்துவந்திருக்கின்றன. தங்களது கோபம், ஏமாற்றம் போன்றவற்றை மிகவும் அழகாக வெளிப்படுத்த உதவும் சொற்களையோ சொல்லாடல்களையோ வட்டார வழக்குகளில் மக்கள் பயன்படுத்திவந்தனர். அதற்கு இணையாகத் தமிழில்கூட மிகச் சரியான அர்த்தம் உள்ள சொல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சில வட்டார வழக்குச் சொற்கள் காலப்போக்கில் மறைந்துவருகின்றன. வட்டார வழக்குகளுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் புதுமைப் பித்தன். அவருடைய ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையில் நெல்லை வட்டார வழக்கு அழகு கொஞ்ச வலம்வரும். ஆனால், அவர்கூட ஆவலாதி என்கிற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அதற்கான வாய்ப்பு அந்தக் கதையில் வரவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x