Published : 20 Jul 2023 06:04 AM
Last Updated : 20 Jul 2023 06:04 AM
வங்கி தொழிற்சங்க வாழ்க்கையில் எத்தனையோ விதமான அனுபவங்கள் உண்டு. கடைநிலை ஊழியர்கள் என்று அழைக்கப்படும் எளிய தோழர்களின் தொழிற்சங்க விசுவாசமும் தனிப்பட்ட நட்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதிலும் தூய்மைப் பணியாளர்கள் கிளையில் பணிபுரிவோருக்கு ஆற்றிய சேவை அவர்கள் பணியைப் போன்றே தூய்மையானது.
சிற்றூர்களில் இளம் ஊழியர்கள் பணிக்குச் செல்கையில் ஒரு தாயைப் போல் அரவணைக்கும் கைகள் அவர்களுடையவை. மாத ஊதியம் அறுபது ரூபாய், வெளியே இருந்து தண்ணீர் எடுத்துவர பதினைந்து ரூபாய் என்று பணிக்கு அமர்த்தப்பட்ட காலம் ஒன்று உண்டு. புதிய நியமனமாகப் பணியில் சேரும் இளம் எழுத்தர்கள், அதிகாரிகள் உள்ளூரில் வீடு பிடித்துத் தங்கி, சாப்பாட்டுக்குச் சிரமப்படுகையில் இந்தப் பெண்கள் அவர்களுக்குச் சமைத்துப் போடவும் செய்வார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT