Published : 22 Jun 2023 06:57 AM
Last Updated : 22 Jun 2023 06:57 AM
நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம்? எதுவரை நடக்கிறோம்? ஆனால், சாரா மார்க்வெஸ் என்கிற பெண்ணின் நடை வேற மாதிரி. அவர் உலகின் பல நாடுகளைக் கால்நடையாகவே நடந்து கடப்பவர். ஆங்காங்கு கூடாரம் அமைத்துத் தங்கிக்கொள்வார். அப்படியொரு கூடாரத்தில் ஒருநாள் தங்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட காலமாகவே இருந்தது. கொழுக்குமலையில் அப்படியான வாய்ப்பு கிடைக்கிறது என்று அறிந்தவுடன் பயணத் தைத் தொடங்கிவிட்டோம். இதமான குளிர், சூடான கட்டஞ்சாயா, கூடாரத்துக்குள் மெல்லிய வெளிச்சத்தில் புத்தக வாசிப்பு, அரட்டை எனக் கனவு கண்டுகொண்டே சென்றோம்.
மூணாறிலிருந்து சூரியநெல்லிக்குச் சென்று எங்களுக்காகக் காத்திருந்த ஜீப்பில் ஏறினோம். சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள கொழுக்குமலைக்குச் செல்ல ஒரு மணி நேரமாகும் என்று சொன்னபோதே கொஞ்சம் ஜெர்க் ஆனது. ஊரைத் தாண்டி ஜீப் மலையில் ஏற ஆரம்பித்தபோது, ‘மொபைல் கீழே விழாமல், நன்றாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துகொள்ளுங்கள். பயம் ஒன்றும் இல்லை. இயற்கையையும் இந்தப் பயணத்தையும் ரசித்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்நாள் அனுபவமாக இருக்கும்’ என்று ஓட்டுநர் அறிவித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment