Published : 22 Jun 2023 07:00 AM
Last Updated : 22 Jun 2023 07:00 AM
பொழுதுபோக்காகச் செய்யக்கூடிய செயல்கள்கூடச் சில நேரம் நம்மைச் சாதனையாளராக மாற்றிவிடும் என்பதற்கு பனையூர் சுப்ரமணியன் சேஷாத்ரி சான்றாக இருக்கிறார். இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேல் தபால்தலைகளைச் சேகரித்திருக்கிறார்! 13 வயதிலிருந்து தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்து, 65 வயதில் ‘லிம்கா சாதனை’, ‘யூனிக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனைகளில் இடம்பெற்றுவிட்டார்.
“டான் பாஸ்கோ பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி முதல்வர் மேஜையில் புதிய தபால்தலையைப் பார்த்தேன். என் ஆர்வத்தைக் கண்ட ஃபாதர் தாமஸ், ‘இது இத்தாலிய தபால்தலை. இதேபோலப் பல நாடுகளின் தபால்தலைகளையோ நம் நாட்டின் தபால்தலைகளையோ சேகரிக்கலாம். உனக்கு இதில் விருப்பமுள்ளதா?' என்று கேட்டு, அந்தத் தபால்தலையையும் கொடுத்துவிட்டார். அப்படித்தான் நான் தபால்தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment