Published : 14 Nov 2022 06:39 AM
Last Updated : 14 Nov 2022 06:39 AM
அமெரிக்க உளவியல் நிபுணரான மறைந்த ஆப்ரஹாம் மாஸ்லோ, மனிதர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் 5 அம்சங்களை வரிசைப்படுத்தி உள்ளார். மாஸ்லோ கோட்பாடு என அழைக்கப்படும் இது உலக அளவில் பிரபலம். இதில், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் முதல் இடத்தில் உள்ளன. வாழ்வியலுக்கான பாதுகாப்பு என்ற வகையில் வேலைக்கு 2-ம் இடம் கொடுத்துள்ளார். வேலை என்பது பொருளாதார ரீதியாக ஒருவருக்கு சமூகத்தில் பாதுகாப்பை வழங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக சமூக தொடர்பு, கவுரவம், தன்னிறைவு ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
என்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் சிலரை அண்மையில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும்போது, வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர் தான் சமூகத்தில் சந்திக்கும் சில அன்றாட பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டார். ‘இன்னும் வேலைக்குப் போகவில்லையா’ என்ற கேள்வியை தினமும் எதிர்கொள்வதாக அவர் கூறியபோது நா.முத்துக்குமாரின் ‘வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை’ எனும் வரி ஞாபகத்திற்கு வந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment