Published : 09 Apr 2022 10:50 AM
Last Updated : 09 Apr 2022 10:50 AM
புதர்களைப் பற்றி நேரடியான அவதானிப்பு மூலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின் அடுத்த பாடத்திட்டமாக நீர்நிலைகளைப் பற்றியும் நீர்நிலைகளுக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றியும் படிப்பது என்று திருவண்ணா மலை மருதம் பள்ளியில் முடிவெடுத்தோம்.
இதற்கு எங்களின் சக ஆசிரியர் மாசிலாமணி அண்ணாதான் வழிகாட்டி. எங்கள் அமைப்பு கடந்த இருபது ஆண்டுகளாக திருவண்ணாமலை மலையில் மரம் நடுதல், காட்டுத் தீயை அணைத்தல், தீத்தடுப்பு பாதை உருவாக்குதல் போன்ற வேலைகளைச் செய்துவருகிறது. மலையில் செய்யும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் தலைவர் மாசிலாமணி அண்ணாதான். இந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு இயற்கைத் தலத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நுணுக்கமாகத் தெரிந்துவைத்துள்ளார். ஒரு சுனை எங்கிருந்து உருவாகிறது, எந்த அருவி எந்த பாதையில் பாய்ந்து எந்த நீர்நிலையைச் சென்றடைகிறது என்று ஆழமாகப் புரிந்துவைத்துள்ளவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...