Published : 28 Sep 2024 06:11 AM
Last Updated : 28 Sep 2024 06:11 AM

ப்ரீமியம்
சாலிம் அலியின் முதல் மாணவர்

நாகர்கோவிலைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் ராபர்ட் கிரப் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். இந்தியாவின் பறவை மனிதர் சாலிம் அலியின் முதல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் என்கிற பெருமைக்குரியவர் கிரப். சாலிம் அலி பணிபுரிந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் முதன்மை அறிவியலாளராகப் பணிபுரிந்தவர். அதன் பிறகு நாகர்கோவிலில் இயற்கை சுற்றுச்சூழல் மீட்பு நிறுவனத்தை நிறுவி செயல்பட்டுவந்தார்.

இமயமலை, அந்தமான் -நிகோபார் தீவு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகளைக் குறித்து இவர் ஆராய்ந்துள்ளார். இந்தியாவின் 22 விமான நிலையங்களில் விமானங்கள் மீது பறவைகள் மோதுவது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி, அவற்றை இயற்கையாக எப்படிக் கட்டுப்படுத்துவது என ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பறவை கட்டுப்பாடு, மலேசியாவின் சராவக் பகுதியில் பறவைகள் பாதுகாப்பு, மலேசிய தேசிய நீர்நிலைப் பறவைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x