Published : 15 Jun 2024 08:58 AM
Last Updated : 15 Jun 2024 08:58 AM
பிளாஸ்டிக் என்றழைக்கும் ஞெகிழி நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொருள் ஆகியிருக்கிறது. நாம் புழங்கும் பல்வேறு கருவிகள், ஊர்திகள் எல்லாவற்றிலும் அதன் பயன்பாடு உள்ளது. இதில் மறுசுழற்சி செய்ய முடியாத, உயிரியல் சிதைவுக்கு உட்படுத்த முடியாத ஞெகிழிப் பொருள்கள் சுற்றுச்சூழலின் மீது பெருஞ்சுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா ஆறுகளும் கடலைச் சென்றடைகின்றனவோ இல்லையோ, நிலத்தின் எல்லாக் கழிவுகளுக்கும் இறுதிப் புகலிடம் கடலாகவே இருக்கிறது.
ஆண்டு தோறும் 80 லட்சம் டன் ஞெகிழி கடலில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 95% கடலடித்தரையில் படிந்துவிடுகிறது. ஆர்க்டிக் முதல் அண்டார்ட்டிக் வரை உலகக் கடலின் அவ்வளவு மூலை முடுக்குகளிலும் பரவிக்கிடக்கும் ஞெகிழி மாசு, அங்குள்ள வாழிடங் களையும் உயிரினங்களையும் பாதித் துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment