Published : 16 Dec 2023 06:03 AM
Last Updated : 16 Dec 2023 06:03 AM
அது ஒரு மகிழ்ச்சிகரமான குளிர்காலத்தின் தொடக்கக் காலம். சென்னையில் மார்கழி மாதப் பறவைகள் நோக்கும் திருவிழாவில் கலந்துகொள்ளும் (Margazhi Bird Utsav) வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பூமியின் வடதுருவத்தில் கடுங்குளிர் நிலவும்போது அங்குள்ள நாடுகளிலிருந்து மத்திய ஆசியப் பறவை வான்வழித்தடம் (Central-Asian flyway) வழியே இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பல வகைப் பறவைகள் வலசை வருகின்றன. இவ்வான் வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியே சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு இளைப்பாறுவதற்காக, உணவுக்காக, இனப்பெருக்கத்திற்காக ஈரநிலப் பறவைகள் வருகின்றன. அதனைக் கொண்டாடும் விதமாக 2019இல் தொடங்கப்பட்டதே ‘மார்கழிப் பறவைகள் திருவிழா’. இந்தப் பறவைகள் திருவிழாவின்போதுதான் பறவைகள் உலகில் முதன்முதலில் நான் அடியெடுத்து வைத்தேன். அதற்கு முன்புவரை ஏதோ பறவைகள் வானத்தில் பறக்கின்றன என்று நினைத்துக்கொண்டு, அவற்றின் பெயரைக்கூட தெரிந்துகொள்ள முயன்றதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT