Published : 31 Jan 2023 06:36 AM
Last Updated : 31 Jan 2023 06:36 AM

ப்ரீமியம்
மீண்டும் கற்கால வால்நட்சத்திரம்!

 சி. ஜோசப் பிரபாகர்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் வானில் அந்த வால்நட்சத்திரத்தை நிச்சயமாகக் கண்டிருப்பார்கள். ஏனென்றால், புவியில் நம் கண்களையும் வானத்தையும் கூச வைக்கும் வகையிலான அளவுகடந்த ஒளியைக் கூட்டாக உமிழும் விளக்குகள் அன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வால்நட்சத்திரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘பொன்னியின் செல்வன்’ கதையை அறிந்தவர்களுக்கு வால்நட்சத்திரம் அல்லது ‘தூமகேது’ எனப்படும் ‘Comet’ குறித்த ஆர்வம் தோன்றியிருக்கலாம்.

கற்கால மனிதர்கள் வியந்து பார்த்த அதே வால்நட்சத்திரம் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்துப் புவிக்கு அருகில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. அதன் பெயர் C/2022 E3 (ZTF). அதன் பெயரில் இடம்பெற்றுள்ள ‘C’ என்பது ‘Comet’யைக் குறிக்கிறது. 2022 மார்ச் இரண்டாம் தேதி (அதாவது ஐந்தாவது அரை மாதம்-A,B,C,D,E) Zwicky Transient Facility (ZTF) என்கிற ஆய்வுக் கருவி மூலம் கண்டறியப்பட்ட மூன்றாவது (3) வால்நட்சத்திரம் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x