Last Updated : 14 May, 2023 09:37 AM

 

Published : 14 May 2023 09:37 AM
Last Updated : 14 May 2023 09:37 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 16: முத்தாணியின் பொய்

முத்தாணிக்கு வயது முப்பது இருக்கும். அவளுக்கு வேலை செய்வது என்றால் மலையை சுமப்பது மாதிரி மலைப்பாய் இருக்கும். அப்படி ஒரு சோம்பேறி. அவளுக்கு அம்மா, அப்பா, மாமன், மாமியார் என்று யாருமில்லை. புருசன் மட்டும் இருக்கிறான். அவனும் கெடைக்காரர்களோடு சேர்ந்து காடா, தேசமாய் ஆடு மேய்க்கப் போய்விடுவான். மூன்று, நான்கு மாதத்துக்கொருமுறை இரண்டு படி கம்போ, சோளமோ மேல் துண்டில் முடிந்து கொண்டு வந்து கொடுப்பான். அதோடு ஒரு நாள் ராத்திரி மட்டும் தங்கிவிட்டு மறுநாள் நான்கு ஆள் கஞ்சியை ஒரே நேரத்தில் குடித்துவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுவிடுவான். இவள் எப்போதும்போல் காடுகளுக்கு வேலைக்குப் போய் சாப்பிடுவாள்.
வேலை செய்யும்போது அது களை வெட்டு என்றாலும் சரி வேறு எந்த வேலை என்றாலும் சரி ஆட்களோடு சரிசமமாய் வேலை செய்ய மாட்டாள். பின் தங்கியே இருப்பாள். காட்டுக்காரிக்கும் இவளோடு நிறை பிடித்தவர்களுக்கும் இவள் மீது எரிச்சலாய் இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x