Published : 17 Apr 2022 09:15 AM
Last Updated : 17 Apr 2022 09:15 AM
திருமணம் முடிந்து புகுந்த வீடு, குழந்தை என்றான பிறகு பெரும்பாலான பெண்களால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. ஆனால், இதுதான் விதியென்று சிலர் ஓய்ந்துவிடுவதில்லை. இல்லத்தரசியாக வீட்டையும் கவனித்துக்கொண்டு ஏதாவது சிறு தொழிலையும் செய்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கிருத்திகா. சென்னையைச் சேர்ந்த இவர் தன்னை ‘ஹோம் பேக்கர்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
கிருத்திகாவின் பிறந்த வீட்டில் கடலை மிட்டாய் செய்வது குடும்பத் தொழில். சிறுவயதில் சிறுவாட்டுக் காசுக்காகக் கடலைமிட்டாய் உருட்டுவது, பாக்கெட்டுகளை ஒட்டுவது என்று சிறு சிறு வேலைகளைச் செய்த கிருத்திகாவுக்கு அந்தத் தொழில் மிகவும் பிடித்திருந்தது. திருமணம் முடிந்து சென்னை வந்த பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். வயிற்றில் மகள் உதித்த நான்கு மாதங்களில் வேலையை விட்டுவிட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT