Published : 08 Apr 2022 11:42 AM
Last Updated : 08 Apr 2022 11:42 AM
கார்த்திகை பிறந்துவிட்டால் போதும். அந்தக் கிராமத்துக்காரர்கள் பௌர்ணமியை ஒட்டிய திருக்கார்த்திகை எப்போது வருமென்று ஆவலோடு காத்திருப்பார்கள். ஏனென்றால், இந்த மூன்று நாட்களும் ஊர் ஆட்கள் மொத்தமும் மந்தையில்தான் குவிந்து கிடப்பார்கள். பெண்கள் தங்கள் வீட்டு வாசற்படிகளில் ஆளுக்கொரு கிளிஞ்சட்டியில் (அகல் விளக்கு) தீபமேற்றி வைத்துவிட்டு, ஊர்சனங்களுக்குக் கொடுப்பதற்காகப் பொங்கல் வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என்று எல்லோரும் விதம் விதமாக விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். விடிய விடிய சளைக்காமல் விளையாட்டுத்தான். இவர்களின் விளையாட்டைப் பார்ப்பதற்காகப் பெளர்ணமி நிலவு கிழக்குத் திக்கத்தில் சீக்கிரமே புறப்பட்டுத் தன் பால் ஒளியைச் சிந்தியவாறு மெல்லத் தவழ்ந்து வரும். அப்படி வரும்போது அதனுடன் சிறு சிறு மேகத்துணுக்குகளும் நட்சத்திரங்களும் கூடவே வந்தால், நிலா அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கிராமத்துக்காரர்களின் விளையாட்டைப் பார்க்க தானாகவே தனித்து வரும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment