Published : 30 Mar 2025 08:16 AM
Last Updated : 30 Mar 2025 08:16 AM
ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அடுத்த பக்கம் அவை எதுவுமே நடவடிக்கை எடுக்கப்படாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய நிலைமை. இதைத்தான் நாம் இவ்வளவு காலம் பேசிவந்திருக்கிறோம். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை ஒருவன் நேரிலும் தொலைபேசியிலும் மிரட்டுகிறான். உடனே அவன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அடுத்த நாளே கைதாகிறான்.
ஆனால், நம் நாட்டில்தான் அருணா ஷான்பாக் நியாயமே கிடைக்காமல் 41 வருடங்களாகக் கிட்டத்தட்ட ஒரு ஜடத்தைப் போல இருந்திருக்கிறார். அவரைக் கருணைக் கொலை செய்யச் சொல்லி அவருடைய நலம் விரும்பி பிங்கி விரானி என்னும் பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டது. அருகில் போய் பேசினால் மட்டுமே கண்ணீர் வழியும் கன்னங்களுடன் அருணா எத்தனையோ வருடங்கள் உணர்வற்ற நிலையில் படுக்கையில் இருந்து இறந்துபோனார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment