Published : 10 Nov 2024 07:12 AM
Last Updated : 10 Nov 2024 07:12 AM
என் சிறுவயதில் ‘அம்புலிமாமா’ மட்டுமே எனக்கு அறிமுகம் ஆனது. அதில் இருந்த அழகான படங்கள், கதையை வாசிக்கும் ஆர்வத்தை என்னுள் தூண்டின. இதுதான் என் வாசிப்பின் தொடக்கக் காலம்.
எங்கள் வீட்டில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதால் எனக்கு யாருடைய எழுத்தும் அறிமுகம் ஆகவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு உறவினர்கள் வீட்டில் இருந்த ஆனந்த விகடன், குமுதம், கல்கி, மஞ்சரி எனப் பிரபலமான இதழ்கள் என் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டின. அவற்றில் வரும் தொடர்கள், கதையின் மீதான பேரார்வத்தை என்னுள் விதைத்தன. சுஜாதா, சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் கதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பள்ளிப் பாடங்களுக்கு மத்தியிலும் என் வாசிப்பை நிறுத்தியதில்லை. தொடர் வாசிப்பு எனக்குள் கவிதை எழுதும் ஆர்வத்தையும் வளர்த்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment