Last Updated : 13 Oct, 2024 07:59 AM

 

Published : 13 Oct 2024 07:59 AM
Last Updated : 13 Oct 2024 07:59 AM

ப்ரீமியம்
என் பாதையில்: பூமாலையால் கிடைத்த ஞானம்!

இருபது வருடங்களுக்கும் மேலாக ஓட்டும் இருசக்கர வாகனம். சீரற்ற சாலைகளுக்கு மத்தியில் அதிசயமாகப் புதிதாய் போடப்பட்ட மதுரை செல்லூர் கண்மாய் ஓர சாலை. அதிக வாகனப் போக்குவரத்தின்றி இருந்த முன் அந்தி மாலைப் பொழுது.

நீத்தார் சடங்கு முடிந்து வீசி எறியப்பட்ட எண்ணற்ற மாலைகளில் ஒன்றின்மீது வண்டியின் முன் சக்கரம் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை மீறி வலது பக்கம் சரிந்தது வண்டி. மிதமான வேகத்தில் சென்றும் நிறுத்த முடியவில்லை. வலது முழங்கையும் முழங்காலும் சாலையைத் தேய்த்துத் தாங்க, பெரும் கூப்பாடோடு கைகளை விடுவித்து எழ முயன்றேன். அதற்குள் ஏழெட்டுப் பேர் சூழ்ந்துவிட, ஒருவர் காலை உதறச் சொன்னார். இன்னொருவர் கையைக் கொடுத்து எழுப்பிவிட, வலது காலை ஊன்ற முயன்று மீண்டும் கீழே விழுந்தேன். மீண்டும் முயன்று சரிந்தேன். மூட்டே இல்லாதது போன்ற உணர்வு. ‘என் கால் போச்சு’ எனச் சில நிமிட அரற்றல். கிட்டத்தட்ட நொண்டிக்கொண்டே இருவர் துணை யோடு வேறொரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஜவ்வு முறிவு என எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தெரிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x