Published : 13 Oct 2024 07:54 AM
Last Updated : 13 Oct 2024 07:54 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 39: ஆறு வாரங்களில் அதிகரிக்காது தன்னம்பிக்கை

பெண்கள் தங்கள் வாழ்வுரிமைக் காகவும் அனைத்துத் தளங்களிலும் தங்களின் இருப்பை உறுதிசெய்யவும் போராடியதைத் தொடர்ந்து அவர்களுக்கான அங்கீகாரம் ஓரளவுக்குக் கிடைக்கத் தொடங்கியது. சுவாசிப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் பெண்கள் உணரத் தொடங்கியபோதே உரிமைக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. உயிரோடு இருப்பதற்குச் சுவாசித்தால் மட்டும் போதும். ஆனால் வாழ்வதற்கு? இந்தக் கேள்விதான் பெண்ணுரிமைக் குரல்கள் உலகம் முழுவதும் சேர்ந்தொலிக்கக் காரணமாக அமைந்தது.

கல்வியின் மூலம் அறிவும் ஞானமும் பெற்ற பெண்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். வெறும் போகப் பொருளாக மட்டுமே தாங்கள் கையாளப்படுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை உணர்த்தினர். பெண்கள் மீது கட்டமைக்கப்பட்ட இலக்கணங்களையும் அடையாளங் களையும் கேள்வி கேட்டனர். நாடுகள் தோறும் பெண்களுக்கான உடையும் கலாச்சாரமும் வேறுபட்டாலும் அடிப் படையில் அவர்கள் அனைவருமே நுகர்வுப் பொருளாக மட்டுமே பாவிக்கப்படுவதை எதிர்த்தனர். காட்சிப் பொரு ளாக அவர்கள் நடத்தப்படு வதைக் கண்டித்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x