Last Updated : 15 Sep, 2024 07:51 AM

 

Published : 15 Sep 2024 07:51 AM
Last Updated : 15 Sep 2024 07:51 AM

ப்ரீமியம்
வானவில் பெண்கள்: பொழுதுபோக்கைவிட வருமானமே முக்கியம்

ஆய கலைகள் 64 என்பார்கள். தாமரைச்செல்விக்கோ உலகத்தில் உள்ள அத்தனை கலைகளையும் கற்றுத்தேர வேண்டும் என்று விருப்பம். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது 265 கலைகளைக் கற்றறிந்திருப்பதோடு அவற்றில் பலவற்றைப் பிறருக்குக் கற்றும் தருகிறார்.

சிறு வயது முதலே குறைவில்லா வாழ்க்கையை அனுபவித்த தாமரைச்செல்வியை 16 வயதில் அவருடைய தந்தையின் மரணம் உலுக்கியது. சேலத்தில் வசித்தவர்கள், தந்தையின் மறைவுக்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். தாமரைச்செல்விக்குப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்தது. எதையும் செய்யப் பிடிக்காமல் இருந்தவரை அவருடைய அம்மாதான் பள்ளிப் படிப்பு தவிர வேறு ஏதாவது பயிலும்படி சொல்லியிருக்கிறார். அதனால், அழகுக் கலைப் பயிற்சி வகுப்புக்கு தாமரைச்செல்வி சென்றார். காலையில் அங்கே படித்ததை மாலையில் வீட்டுக்கு வந்து பிறருக்குக் கற்றுத்தந்தார். இப்படித் தொடங்கிய பயிற்சி பின்னாளில் தஞ்சாவூர் ஓவியம், எண்ணெய் ஓவியம், கைவினைக் கலை, ஃபேஷன் நகைகள், சமையல் கலை, பூங்கொத்து தயாரித்தல் என அடுத்தடுத்த உயரங்களை நோக்கிச் சென்றது. “இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் புடவை கட்டுதல், புருவ முடி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் கற்றுக்கொண்டேன். கைவினைக்கலைகளைத் தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று பயிற்சி அளித்திருக்கிறேன். ஒரே நாளில் 600 பேருக்குப் பயிற்சி அளித்த நாள்களும் உண்டு” எனப் புன்னகைக்கிறார் தாமரைச்செல்வி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x