Published : 04 Aug 2024 08:31 AM
Last Updated : 04 Aug 2024 08:31 AM
காக்கைபாடினியார் நச்செள்ளை தமிழ்ச் சங்க காலக் கவிஞர்களில் பெயர் பெற்றவர். இவரது காலம் பொ.ஆ (கி.பி.) 2ஆம் நூற்றாண்டுக்கும் 7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. குறுந்தொகை, புறநூனூறு ஆகிய தொகுப்புகளில் முறையே ஒரு பாடலும் பதிற்றுப்பத்து தொகுப்பில் பத்து பாடல்களும் இவரது பங்களிப்புகள். இவை அல்லாமல் காக்கைபாடினியம் என்னும் யாப்பிலக்கண நூலையும் அவர் எழுதியிருக்கிறார்.
இவரது குறுந்தொகைப் பாடலில் பாண்டிய நாட்டுப் பகுதியான தொண்டி குறிப்பிடப்படு வதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. கண்டீரம் என்னும் பகுதியை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளியைப் பற்றிய குறிப்பும் இதில் உண்டு. கண்டீரம் இன்றைய நீலகிரிப் பகுதியில் உள்ள ஒரு மலை. நச்செள்ளை எழுதிய பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவன், சேர மன்னனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அதனால் இவர் சேர நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்கிற துணிபும் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment