Published : 14 Jul 2024 12:49 PM
Last Updated : 14 Jul 2024 12:49 PM
என் வாசிப்புப் பயணம் பொறாமையின் விளைவாகத் தொடங்கியது. நான் முதுகலை முதலாம் ஆண்டு படித்துவருகிறேன். இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் பாடத்தை மனப்பாடம் செய்து அதை அப்படியே தேர்வுத்தாளில் எழுதுவதுதான் என் கல்விமுறையாக இருந்தது. ஒருநாள் என் வகுப்பில் என்னுடன் பயிலும் சக மாணவி ஒருவர், பாடநூல்களைத் தாண்டிப் படித்த இலக்கியங்களைப் பற்றிப் பேசினார். ஆசிரியர் அவளைப் பாராட்டினார். அந்த மாணவியின் செயல், எனக்குள் பொறாமையையும் புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தையும் ஒருசேர உருவாக்கியது.
படிப்பது என்று முடிவு எடுத்துவிட்டேன்; ஆனால் எதில் ஆரம்பிப்பது, என்ன படிப்பது என்று தெரியவில்லை. நாவல், சிறுகதை, புதுக்கவிதை போன்ற நவீன இலக்கிய வகைமைகளின் பெயர்களை மட்டுமே நான் அறிவேன். அவற்றின் தன்மையோ உருவமோ அவ்வளவாகத் தெரியாது. அப்போதுதான் என் பேராசிரியர் புத்தக அறிமுக வகுப்பில் கவிப்பித்தனின் ‘ஈமம்’ நாவலை அறிமுகப்படுத்தினார். அந்நாவலை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மட்டுமே கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த என் கண்களில் நீர் வழியக் கண்டேன். இறந்த ஒருவன் மீண்டும் பிழைத்தபோது அவன் இச்சமூகத்தால் எவ்வாறெல்லாம் ஒதுக்கப்படுகிறான் என்பதை இந்நாவல் துல்லியமாக வெளிப்படுத்தியது. உடல் மீதான பற்றை இந்நாவல் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. அறநூல்கள் அளிக்காத உறுதிப்பொருளை இந்நாவல் கொடுத்ததாக உணர்ந்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment