Published : 07 Jul 2024 07:17 AM
Last Updated : 07 Jul 2024 07:17 AM
‘எதுவும் தாமதமாகிவிட வில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்’ என்கிற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) வரிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் ஸ்ருதி. சென்னையைச் சேர்ந்த இவர் தன் மகளால் ஓவிய மாணவியானார். ஆர்வமும் பயிற்சியும் இவரை வெகுவிரைவில் ஓவியக்கலையில் தேர்ச்சிபெறச் செய்தன. 2023இல் ‘பிச்சர் ஆர்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கும் அளவுக்கு இத்துறையில் திறமையை வளர்த்துக்கொண்டார் ஸ்ருதி.
சிக்கல் இல்லாத குடும்ப வாழ்க்கை, செழிப்பான பொருளாதாரப் பின்புலம் என வாழ்க்கையே ஸ்ருதிக்கு மிகச் சிறந்த ஓவியமாகத் தான் அமைந்திருக்கிறது. ஆனால், அவர் இவற்றில் மட்டுமே திருப்தி யடையவில்லை. தனக்கென்று தனித்ததோர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தன்னுடைய மகளுக்கு ஓவியம் வரையச் சொல்லிக்கொடுத்த ஸ்ருதியை வண்ணங்களும் அவற்றி லிருந்து பிறந்த ஓவியங்களும் ஈர்த்துக் கொண்டன. ஸ்ருதி செல்ல வேண்டிய பாதையை அவை வெளிச்சமிட்டுக் காட்டின. அன்றைக்குப் பிடித்த தூரிகை பிறகு அவரது கையில் ஆறாம் விரலாக இணைந்துகொண்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT