Last Updated : 30 Jun, 2024 07:18 AM

 

Published : 30 Jun 2024 07:18 AM
Last Updated : 30 Jun 2024 07:18 AM

ப்ரீமியம்
மாமியாரும் மருமகளும் எதிரிகளா?

தமிழ்த் திரைப்படங்களில் மாமியார் - மருமகள் உறவு என்பது பெரும்பாலும் செயற்கையாகவும் எதிர்மறையாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அண்மையில் வெளி யான ‘உள்ளொழுக்கு’ (Ullozhukku-அடிநீரோட்ம்) மலையாளப் படம் விதிவிலக்கு. திருமண அமைப்பு, ஏமாற்றம், துரோகம், ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரம், கடமை என அனைத்தையும் இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்களின் உணர்வுகளையும் கேரளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தையும் மையமாக வைத்து நுணுக்கமாகப் படத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டோமி.

தன் மகன் இறந்துபோக, குடும்ப வாரிசைச் சுமக்கும் மருமகள் மீது அளவு கடந்த வாஞ்சை பொங்குகிறது லீலாம்மாவுக்கு (ஊர்வசி). ஆனால், அஞ்சுவுக்கு (பார்வதி) வரும் ஒரு போன், அஞ்சுவின் ரகசிய வாழ்க்கையை லீலாம்மாவுக்குத் தெரியப்படுத்துகிறது. மகனின் பிணம் வீட்டில் கிடத்தப்பட்டிருக்க, சடங்கு முடிந்தவுடன் வீட்டில் இருந்து வெளியேறத் துடிக்கிறாள் அஞ்சு. அவள் மனதை மாற்றித் தங்க வைத்துவிடலாம் என நினைக்கும் லீலாம்மா, வடியாத வெள்ளத்தைச் சாதகமாக்கிக்கொள்ள முனைகிறார். அந்த இறப்பு வீட்டில் லீலாம்மாவுக்கும் அஞ்சுவுக்குமிடையே நடக்கும் உணர்வுப் போராட்டம், இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடும் வெவ்வேறு எண்ண ஓட்டமுள்ள மனங்கள், அதற்கு அடிநாதமாக இருக்கும் இருவருக்குமான பிணைப்பும் அதற்கு இணையான வலியும் எனப் படம் மனித உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாகத் தொட்டுச் செல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x