Published : 19 May 2024 07:41 AM
Last Updated : 19 May 2024 07:41 AM

ப்ரீமியம்
பெண் எனும் போர்வாள் - 27: நான் பெண் இல்லையா?

வேண்டி விரும்பியோ தகுதித்தேர்வு எழுதியோ அவரது பிறப்பு நிகழவில்லை. நிறவெறியும் அடிமைத்தனமும் கோலோச்சிய காலத்தில் நியூயார்க்கின் கிராமப்புறப் பகுதியில் ‘அடிமைகள்’ என முத்திரை குத்தப்பட்ட குடும்பமொன்றில் 1797இல் இசபெல்லா பாம்ஃப்ரீயாகப் பிறந்தார். பிறப்பு தன் கையில் இல்லாத நிலையில் தான் எந்த அடையாளத்தோடு இறக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருந்தார். அந்த உறுதிதான் ‘அடிமை’ என்கிற அடையாளத்தை அழித்தொழித்து சோஜர்னர் ட்ரூத் என்கிற போராளியாக அவரைப் பரிணமிக்கச் செய்தது.

சோஜர்னர் ட்ரூத்துக்குப் படிக்கவும் எழுதவும் தெரியாது. கல்வியறிவு இல்லை என்பது தன் போராட்டத்துக்கு எந்த வகையிலும் தடையாக அமைந்துவிடாத அளவுக்குக் கூர்மையான சிந்தனையும் பேச்சாற்றலும் நிறைந்தவராக இருந்தார். தன்னைப் போலவே அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் மீட்சிக்காகப் போராடினார். சக மனிதனின் துயரை உணர்வதும் அதை நீக்கக் குரல்கொடுப்பதுமே மனிதராகப் பிறந்ததற்கான பலன் என உறுதியாக நம்பியதோடு அதைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் கடைப்பிடித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x