Published : 07 Apr 2024 08:53 AM
Last Updated : 07 Apr 2024 08:53 AM

ப்ரீமியம்
வானவில் பெண்கள்: காவலர்களின் கவலைக்குத் தீர்வு

வேலைக்குச் செல்லும் பெண்களின் அன்றாடப் பிரச்சினையாகவும் முதன்மைப் பிரச்சினையாகவும் இருப்பது சுகாதாரமான கழிப்பறை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பெண் ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான கழிப்பறையைக்கூடப் போதுமான எண்ணிக்கையில் அமைப்பதில்லை. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் நிலை இப்படியென்றால், போக்குவரத்துக் காவலர்களாகச் சாலையில் பணியாற்றும் பெண்களின் நிலை கவலைக்குரியது.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 546 பெண் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இவர்கள் இயற்கை உபாதையைக் கழிக்க முறைப்படுத்தப்பட்ட கழிப்பறைகள் இல்லாத நிலையில் பணி நேரத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கொளுத்தும் வெயிலில் தாகம் எடுத்தால்கூடத் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டிய சூழல். போதுமான தண்ணீரைக் குடிக்காமலும் நீண்ட நேரத்துக்குச் சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களது உடல்நலனைப் பாதிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x