Last Updated : 05 Nov, 2023 06:14 AM

 

Published : 05 Nov 2023 06:14 AM
Last Updated : 05 Nov 2023 06:14 AM

ப்ரீமியம்
உழைப்பே வெல்லும்

திட்டமிடலும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணம் கடலூர் அட்சயா மகளிர் சுய உதவிக்குழு. ரசாயனப் பொருள்களின் துணையோடு தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்கள், உடல் நலக்கேட்டுடன் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்தக் குழுவினர் துளசி ஹெர்பல் நாப்கின் தயாரிப்பில் இறங்கினர். இந்தத் தொழிலைத் தொடங்கி ஓராண்டுக்குள் தங்களுக்கென தனி அடையாளத்தை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்’ திட்டத்தின் மூலம் கடலூர், மஞ்சக்குப்பத்தில் 19 உறுப்பினர்களோடு ‘அட்சயா மகளிர் சுய உதவிக்குழு’ ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் குழுவாகச் சேர்ந்து கடன் வாங்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள் என்கிற மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றிய பொதுவான பிம்பத்தைத் தங்கள் செயல்பாட்டால் இவர்கள் மாற்றியுள்ளனர். 2022இல் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டதோடு சேமிப்பு தவணை தவறாமல் வங்கியில் செலுத்தப் பட்டது. மூன்று மாதங்கள் முடிவடைந்ததும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் மூலம் ஆதார நிதியாக 10 ஆயிரம் ரூபாய் பெற்று ஒரு தையல் மிஷினை வாங்கினர். ஆறு மாதங்கள் முடிவடைந்ததும் ரூபாய் 6 லட்சம் வங்கிக் கடன் பெற்றுத் தொழில் தொடங்க முடிவெடுத்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x