Last Updated : 06 Aug, 2023 08:30 AM

 

Published : 06 Aug 2023 08:30 AM
Last Updated : 06 Aug 2023 08:30 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 27: தன் மானம்

திருவேங்கடத்துக்கும் சிவகாமிக்கும் கல்யாணம் முடிந்து இன்றோடு மூன்று மாதம் ஆகிவிட்டது. இனி அவர்கள் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்ல, திருவேங்கடத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. விடியற்காலையிலேயே தன் மாமனார் தனக்கு வெயில் பட்டுவிடக் கூடாதென்று கூடார வண்டி கட்டி தன்னைப் பொன்னம்போல் கொண்டுபோய் விடுவார் என்று இருக்க, அவரோ காலையில் நன்றாக விடியும் முன்பே, “மாப்பிள்ளை, இந்தக் கல்யாணத்து வேலையால பிஞ்சைக்கு இறைக்கவே போகலை. கருது வாங்குன காடெல்லாம் பட்டுப் போயிரும் பொலுக்கோ. அதனால நானு இறைக்கப் போறேன். நீங்களும் சிவகாமியும் ஊருக்குப் போயிட்டு வாங்க. உங்ககூட துணைக்கு நம்ம லிங்குசாமி வருவான். மக சிவகாமிய நல்லாப் பார்த்துக்கோங்க. அவ நம்மளை மாதிரி காடு கரை பக்கமெல்லாம் போனதில்லை. நம்மல்லாம் பெரிய சம்சாரி (விவசாயி). ஆனாலும் சொல்லவே வெக்கமா இருக்கு. எம்மவளுக்குக் காட்டு வேலையே தெரியாது. ஆனா, வீட்டுல எத்தனை படின்னாலும் குந்தி அடுப்பு வேலை நல்லா செய்வா. எத்தனை பேருக்குன்னாலும் கஞ்சி காய்ச்சி ஊத்துவா. அவளை அவ மனம் கோணாதபடி பார்த்துக்கிடணும். நானு பத்துநா கழிச்சி உங்க வீட்டுக்கு வாரேன்”னு சொல்லிட்டு அப்படியே கழனிக்குக் கிளம்பிட்டாரு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x