Last Updated : 23 Jul, 2023 06:14 AM

 

Published : 23 Jul 2023 06:14 AM
Last Updated : 23 Jul 2023 06:14 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 25: பெருத்த சம்சாரி பேரு வாங்கின யாவாரி

காசிநாதன் நல்ல உழைப்பாளி. அவனுக்கு நஞ்சை, பிஞ்சை என்று மூன்று ஏக்கர் வரை இருந்தது. அதனால், கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் எந்த நேரமும் வேலை செய்தபடிதான் இருப்பான். அவன் பக்கத்து வீட்டில் பவுன்தாசு இருந்தான். அவன் அநியாயத்துக்குச் சோம்பேறி. எப்போதும் வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போகிறவர்களையும் வருகிறவர்களையும் நிப்பாட்டிப் பேசிக்கொண்டே இருப்பான்.

“மேயுற மாட்ட கெடுத்துச்சாம் போற மாடுங்கிற கதையா இவன்தேன் சும்மா இருக்கான்னா அவசரமா வேலைக்குப் போறவளையுமில்ல பேச்சு கொடுத்து நிப்பாட்டிருதான்” என்று பொம்பளைகள் அலைமோதிக்கொண்டு போவ, ஆண்கள் அவன் கூப்பிட்டதே கேட்காதது போல போய்விடுவார்கள். சிலர், “இவன் பக்கத்து வீட்டுக்காரன் காசி எப்படி அவகாச்சி புடிச்சிப்போயி வேலை செய்யுதான். அவனைப் பாத்தும் இவனுக்குப் புத்தி வரலையே” என்று அங்கலாய்த்துக்கொண்டு போவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x