Published : 02 Jul 2023 07:41 AM
Last Updated : 02 Jul 2023 07:41 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 22: காலம்தான் மருந்து

கணவனோ காதல் துணையோ மறைந்துவிட்டால் அந்தத் துயரிலிருந்து மீண்டுவருவதற்கான முதல் படி ‘இனி கணவர்/துணைவர் இல்லை’ என்பதை ஏற்றுக்கொள்வதாகும். புதிய வாழ்க்கையைச் சீரமைக்கும் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். கணவருக்கு வரவேண்டிய பணமும் உங்கள் வருமானமும் வங்கி வைப்பு நிதியும் உங்கள் பொருளாதார நிலையைக் கணிக்க உதவும். முதலீடு செய்யக்கூடிய நிலை இருந்தால், குடும்பத்தில் நம்பகமான ஒருவரது ஆலோசனையை கேட்டுக்கொள்ளுங்கள்.

இனி தனியாகத்தான் எதையும் செய்யவேண்டும். அழுகையும் தயக்கமும் வந்தாலும் தொடர்ந்து செய்கையில் தன்னம்பிக்கை கூடுவதைக் கவனிப்பீர்கள். இதுவரை வேலைக்குப் போகாதிருந்தால், இனி வேலை அவசியம். உறவினரிடமோ, பகல் காப்பகத்திலோ குழந்தையை விட்டுவிட்டுப் போகவேண்டும். கடினம்தான். தன்னிரக்கமே வேண்டாம். வேலை உங்கள் மனதுக்கு மாற்றாக இருக்கும். வருமானம் ஒரு பாதுகாப்பையும் கொடுக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x