Last Updated : 02 Jul, 2023 08:29 AM

 

Published : 02 Jul 2023 08:29 AM
Last Updated : 02 Jul 2023 08:29 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 22: அருக்காணி

சொந்த ஊரில் பழைய பகவதி அம்மன் கோயிலைப் புதுப்பித்து ‘கும்பாவிசேகம்’ வைக்கிறார்கள் என்று தெரிந்ததும் உள்ளூர்வாசியான அருக்காணிக்கு அப்படி ஒரு சந்தோசம். அருக்காணிக்கு அறுபது வயதுக்கு மேலே ஆகிவிட்டது. கை, கால்கள் எல்லாம் அசந்ததோடு பார்வையும்கூட அரைப்பார்வையாகிவிட்டது. பார்க்கும் பொருள்கள் எல்லாம் பூச்சிதட்டுவதுபோல் தெரிந்தது. அவளுக்கு இரண்டு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் இருந்தார்கள். அப்போதெல்லாம் அருக்காணி இப்படியா இருந்தாள்? ‘ஏணிப்பந்தம்’ போல நிமிர்ந்த நடையுமாக இருந்தாள்.

ஊருக்குள் ஒரு கல்யாணம் என்றாலும் சடங்கு என்றாலும் பிள்ளைப்பேறு என்றாலும்கூட இவள் இல்லாமல் ஒருகாரியம்கூட நடக்காது. இவளிடம் வந்துதான், “எக்கா அருக்காணி நீதேன் முதல் ஆளா என் வீட்டுக்கு வந்து இருந்து என் மக காரியத்த நடத்திவைக்கணும்” என்பாள் ஒருத்தி. இன்னொருத்தி, “எம்மகனுக்கு இன்னார் வீட்டுல பொண்ணு கட்டுவோமின்னு நினைக்கேன். நீ என்னக்கா சொல்லுத?” என்று இவளிடம் வந்து யோசனை கேட்டு இவள் சொன்னபடிதான் செய்வாள். அருக்காணி தன் பகையை மனதில் வைத்துக்கொண்டு எத்தனையோ கல்யாணங்களைத் தடுத்துத் திசை மாற்றிவிட்டிருக்கிறாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x