Last Updated : 04 Jun, 2023 09:38 AM

 

Published : 04 Jun 2023 09:38 AM
Last Updated : 04 Jun 2023 09:38 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 18: கும்பிடு துட்டு

அந்தக் காலங்களில் மணப்பெண்ணாக இருப்பவர்கள் தாலி கட்டி முடிந்த உடனே வயது வித்தியாசமின்றி எல்லாருடைய கால்களிலும் விழுந்து கும்பிடு துட்டு வாங்குவார்கள். மணப்பெண் காலில் விழுந்த உடனே பெரியவர்கள் அவர்களை எழுப்பி, திருநீறு பூசி கையிலிருக்கும் காசைத் தருவார்கள். சிறியவர்கள் ஓடி ஒளிவார்கள். முடியாதபட்சத்தில் கையிலிருக்கும் காசைக் கொடுத்துவிட்டு ஒடுவார்கள். மணப்பெண்களும் அவசர அவசரமாகக் காலில் விழுந்து துட்டை வசூலித்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிச் சேர்க்கும் துட்டு அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

அன்று பசுவந்திக்குக் கல்யாண நாள். அவள் முதல் நாளே எப்படியும் இந்தக் கல்யாணத்தில் நாம் ஐநூறு ரூபாயாவது சேர்த்து ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கிவிடவேண்டுமென்று முடிவோடு இருந்தாள். அதனால், விடியற்காலையில் பொன்னுமணி அவள் கழுத்தில் தாலிகட்டிய உடனே எழுந்து அவசர அவசரமாக எல்லாருடைய காலிலும் விழுந்தாள். இவளைக் கண்டவுடன் பதறி ஓடியவர்களும் உண்டு, பதறாமல் கையில் இருக்கும் காசை அவள் கையில் போட்டுவிட்டுப் பந்தியில் உட்கார்ந்தவர்களும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x