Published : 06 Jan 2024 06:15 AM
Last Updated : 06 Jan 2024 06:15 AM
மாறிவரும் பருவக் காலச் சூழலில் அதிக வெப்பம், மழை, குளிரால் மக்கள் பல உபாதைகளையும் நோய் களையும் அவற்றால் சில நேரம் மரணத்தையும் எதிர்கொள்கிறார்கள். குளிர்காலத்தில் உடல்ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தை களும் முதியவர்களுமே. தோல், சுவாச மண்டலம், இதயம், மூட்டுகள், அவற்றின் கட்டுமானத் திசுக்கள், தசைகள் ஆகியவை குளிர்காலத்தில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இச்சூழலில் குளிர்கால நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம்.
தோல்: சுற்றுப்புறச்சூழலின் பேராபத்திலிருந்து நம்மைத் தோல் பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் தோல் எளிதில் வறண்டு விடும். வறண்ட சருமம் ஈரப்பதத்தை இழக்கச் செய்து தோலில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் வெடிப்புக்குக் காரணமாகிறது. உதடுகளின் மெல்லிய தோலும் கடுமையான குளிரால் வறண்டுபோவதால் காற்றோட்டத்தால் உதடுகள் வறண்டு வெடிக்கத் தொடங்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment