Published : 12 Apr 2023 06:16 AM
Last Updated : 12 Apr 2023 06:16 AM
அறைக் கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு தன் தந்தை தட்டச்சு செய்யும்போது எழும் சத்தத்தில் லயித்துக் கொண்டிருந்தாள் நான்கு வயது பார்பரா. அந்தச் சத்தத்தில் எழுத்துகள் பிறப்பெடுத்து, காகிதத்தில் ஒரு கதை உருவாவதை எப்படியோ அறிந்துகொண்டாள். தானும் எழுத்துகளோடு விளையாடி, ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் முளைவிட்டது.
ஒருநாள் தந்தையின் தட்டச்சு இயந்திரத்தைத் தன் அறைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினாள் பார்பரா. கதவையும் ஜன்னலையும் தாழிட்டாள். தன் மனம்போன போக்கில் தட்டச்சு செய்தாள். தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள் அறை முழுக்கச் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்து பார்பராவின் தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது. மகளுக்கு மேலும் சில காகிதங்களைக் கொடுத்து, தட்டச்சு செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தினார். பார்பராவின் எழுத்துப் பயணம் அங்கிருந்து தொடங்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT