Published : 08 Nov 2022 06:40 AM
Last Updated : 08 Nov 2022 06:40 AM
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தவிர்த்துத் தன்னார்வமாக வானிலைச் செய்திகளை அளிப்போரும் உண்டு. இதில் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜானைப் பின்தொடர்வோர் சற்று அதிகம். எனவே அவர் பதிவிடும் பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. அந்த வகையில், ‘விடுமுறைக்கான வாய்ப்பு குறைவு’ என அவர் பதிவிட்டதற்கு ‘மாணவர்களின் வில்லன் பிரதீப் ஜான்’ என 2கே கிட்ஸ் கமெண்ட் செய்துள்ளனர். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள், ’செல்லம், நாளைக்கு லீவ் வேண்டும்’ என குறும்பு செய்தனர். 2கே கிட்ஸ்களின் இந்தச் செயல் பலரைச் சிரிக்க வைத்தாலும் எந்தவொரு சூழலையும் கலாய்க்கப் பழகி இருக்கும் இந்தத் தலைமுறையைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனப் புலம்பி வருகின்றனர்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment