Published : 27 Sep 2022 09:24 AM
Last Updated : 27 Sep 2022 09:24 AM
இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்துக்கு ‘யூடியூப் கிராமம்’ என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். அந்தக் கிராமம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது. துள்சி என்கிற கிராமம்தான் ‘யூடியூப் கிராமம்’ என்கிற திருநாமத்தைப் பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த ஊரில் ஏராளமானோர் யூடியூப் அலைவரிசையை நடத்திவருவதுதான். மூன்றாயிரம் பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், பாதிக்கும் மேற்பட்டோர் யூடியூப் அலைவரிசைகளோடு தொடர்பில் இருப்பவர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுக்லா, ஜெய் வர்மா ஆகிய இரண்டு இளைஞர்கள் அரசுப் பணியை விட்டுவிட்டு, யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி அதிக வருமானம் ஈட்டினர். இதைக் கண்டுதான் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் யூடியூப் அலைவரிசைகளைத் தொடங்கினார்கள். இந்தக் கிராமத்துக்கு சென்றால் பலரும் கேமராவும் கையுமாகச் சுற்றுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment