Published : 30 Aug 2022 10:33 AM
Last Updated : 30 Aug 2022 10:33 AM
இன்று இளைஞர்களின் டிரெண்ட் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாரையும் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்கிற மனோபாவம் பரவலாக வளர்ந்திருக்கிறது. சென்ற தலைமுறை வரை நண்பர்கள் என்றாலே நாம் வசிக்கிற தெருவில் பழகுபவர்களும் கல்லூரி நண்பர்களும் என்றுதான் இருந்தது. ஆனால், தற்போது அதன் எல்லை சர்வதேச அளவுக்கு விரிவடைந்துவிட்டது.
அதற்குக் காரணம், இணையம். அது தாக்கம் செலுத்தாத மனிதர்களே இன்று கிடையாது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதோடு சமூக வலைத்தளங்களின் பயன்பாடும் திறன்பேசிகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போலவே கருதுகிற மனப்பான்மையும் பரவியிருக்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தினர், கல்லூரியில் படிப்போர் மத்தியில் இதன் தாக்கம் சற்று அதிகமே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment