Published : 02 Feb 2024 06:03 AM
Last Updated : 02 Feb 2024 06:03 AM
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பது ஆசை. அவரது பெற்றோர் ஒரு தையலகத்தில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம், குடும்பத்தை நடத்தவே போதுமானதாக இருந்தது. சைக்கிள் வாங்குவது, ஸ்ரீமதி குடும்பத்தினருக்கு எட்டாக் கனிதான்.
அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஒரு பழைய சைக்கிளைப் புதுப்பித்து, மாவட்ட அளவிலான போட்டியில் ஸ்ரீமதி பங்கேற்றார். அதில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். அப்போதுதான் அவரது ஈடுபாட்டைக் குடும்பமும் முழுமையாகப் புரிந்துகொண்டது. சைக்கிள் பந்தய வீரர் ஒருவர், தான் முன்பு பயன்படுத்திய சைக்கிளைக் கொடுக்க, அதன் மூலமாகவும் சில போட்டிகளில் ஸ்ரீமதி கலந்துகொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT