Published : 02 Jun 2023 06:07 AM
Last Updated : 02 Jun 2023 06:07 AM
இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்த ஐ.பி.எல். சீசன் முடிந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துவிட்டது. என்னதான் சென்னை அணி கோப்பையை வென்றாலும், அந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. சென்னை அணியில் தமிழர்கள் இடம்பெறாமல் போனாலும், பிற அணிகளில் இடம்பெற்ற தமிழர்கள் சிலர் லைம்லைட்டில் இருந்தனர். தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், சாய் கிஷோர் தவிர்த்து மற்ற வீரர்களின் பங்களிப்பைப் பார்ப்போம்.
சாய் சுதர்சன்: சென்னையைச் சேர்ந்த 21 வயதான வளர்ந்துவரும் கிரிக்கெட்டர். குஜராத் அணிக்காக வெறும் ரூ.20 லட்சம் என்ற அடிப்படை விலையில் தேர்வானவர். கேன் வில்லியம்சன் அடைந்த காயத்தால் குஜராத் ஆடும் லெவனில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், கொடுத்த காசுக்கு மேலேயே குஜராத்துக்காக வியர்வையைச் சிந்தினார். குறிப்பாக சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் விளாசிய 96 ரன்களால்தான் குஜராத் அணி சவாலான இலக்கை எட்ட முடிந்தது. மேலும் டாப் ஆர்டரில் குஜராத் அணிக்காகப் பக்கபலமாக விளையாடினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT