Published : 21 Oct 2022 06:39 AM
Last Updated : 21 Oct 2022 06:39 AM
ஒரு சில கலைஞர்களின் வாழ்க்கையில் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழன்றிருக்கிறது. ‘தேங்காய்’ சீனிவாசனின் வாழ்க்கையிலும் அப்படியொரு சுழற்சி உண்டு. சிட்டாடல் நிறுவனம் தயாரித்து ஜோசப் தளியத் ஜூனியர் இயக்கிய ‘இரவும் பகலும்’ (1965) படத்துக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார் தேங்காய் சீனிவாசன். அதில்தான் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமானார். ஜெய்சங்கரும் தேங்காய் சீனிவாசனும் நாடக உலகம் வழியே நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அந்த மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. ‘கதாநாயகனும் புதுமுகம், காமெடியனும் புதுமுகம் என்றால் படம் எப்படி வியாபாரமாகும்?’ என்று கணக்குப் போட்ட பட நிறுவனம், தேங்காய் சீனிவாசனை படத்திலிருந்து நீக்கிவிட்டு, அன்று பிரபலமாக இருந்த நாகேஷை ஒப்பந்தம் செய்தது. காலம் சுழன்றது.. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1972இல் வெளியானது ‘வெள்ளி விழா’.அந்தப் படத்தில் நாகேஷுக்காக எழுதிய கதாபாத்திரத்தில் “நாகேஷைவிட இந்தக் கேரக்டர்ல சீனு பெட்டரா பெர்ஃபாம் பண்ணுவான்.. அவனக் கூப்பிடு” என்று கூறி, அதில், நாகேஷுக்குப் பதிலாக அவரை நடிக்கவும் வைத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment