Last Updated : 26 Mar, 2023 06:00 AM

 

Published : 26 Mar 2023 06:00 AM
Last Updated : 26 Mar 2023 06:00 AM

ப்ரீமியம்
உரக்க முழங்கிய உன்னதக் கலைஞர்

இந்திய நாடக ஆளுமைகளில் ஒருவரான சப்தர் ஹாஷ்மி தனது மாணவப் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜன நாட்டிய மஞ்ச்’ (JANAM) என்கிற நாடகக் குழுவை உருவாக்கினார். மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் நாடகங்களை உருவாக்கினார். 34 வயதுக்குள் 24 நாடகங்களில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து, 4 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர் ஹாஷ்மி.

படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தாலும் நாடகத்துக்காக வேலையை உதறி மக்களுக்காக நாடகங்களை நிகழ்த்தினார். மக்கள் கூடும் இடங்களில் வீதி நாடகங்களை நிகழ்த்தினார். தொழிலாளர்களுக்காக ‘மெஷின்’ என்கிற நாடகத்தை 1978இல் நடத்தினார். அர்த்தமுள்ள வசனங்கள் மூலம் அடர்த்தியான விஷயங் களையும் எளிய மக்களுக்குப் புரியவைத்தார். தொழிலாளர் பிரச்சினை, விவசாயிகளின் துயரம், வேலையின்மை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பணவீக்கம், அரசியல், விலைவாசி உயர்வு போன்று மக்களைப் பாதிக்கும் விஷயங்களை நாடகங்களாக உருவாக்கினார் சப்தர் ஹாஷ்மி. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்கள், கிராமங்களில் நாடகங்களை அரங்கேற்றினார். மக்களுக்காக நடத்தப்படும் நாடகங்களுக்குத் தேவையான பொருளாதார உதவியை மக்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x