Published : 05 Mar 2023 06:16 AM
Last Updated : 05 Mar 2023 06:16 AM
உலக விளையாட்டுத் திருவிழா என்றழைக்கப் படும் ‘ஒலிம்பிக்’ போட்டிகளில் இருந்துதான் பெண்களின் விளையாட்டு வரலாறும் தொடங்குகிறது. ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸில் 1896இல் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஒலிம்பிக் போட்டி, பெண்களின் பங்கேற்பு இல்லாமல்தான் தொடங்கியது.
1900இல் பாரிஸில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், 1,066 பேர் பங்கேற்ற அந்த ஒலிம்பிக்கில் பெண்கள் வெறும் 12 பேர் மட்டுமே பங்கேற்றனர். அந்தக் காலத்தில் பெண்களின் பங்கேற்பு விளையாட்டுகளில் குறைவாக இருந்ததற்குச் சமூகத்தில் ஊறியிருந்த பழமைவாதம் ஒரு காரணம். இன்றும்கூட அடிப்படைவாதம் நிலவும் நாடுகளில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தடை இருக்கிறது. ஆனால், இதுபோன்ற தடைகளைத் தகர்த்துதான் பெண்கள் களம் கண்டார்கள். அந்த வகையில் ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் முன்முயற்சி முக்கியமானது. ஒலிம்பிக்கைத் தாண்டி விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பதை இந்த நாடுகள் தொடர்ச்சியாக ஊக்குவித்தன. 1960க்குப் பிறகே பெண்கள் பங்கேற்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, பொதுவாகவே விளையாட்டுகள் இருபாலருக்கும் சமமானவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment