Published : 19 Feb 2023 07:35 AM
Last Updated : 19 Feb 2023 07:35 AM

ப்ரீமியம்
திரைப்படங்களில் கற்பனை மொழிகள்!

நூறு ஆண்டு இந்திய சினிமாவில் முதல் முறையாக ‘பாகுபலி’ படத்தில் ‘கிளிகி’ என்கிற ஒரு கற்பனை மொழியை (Fictional Language) உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். அது பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. ‘பாகுபலி’ படத்தின் இயக்குநருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அந்தக் கற்பனை மொழியை உருவாக்கியவர், கவிஞரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி. கணினி அறிவியலையும் மொழியையும் இணைத்து ‘லிரிக் இன்ஜினியரிங்’ உள்பட புதுமையான மொழிக் கருவிகளை சோதனை முறையில் உருவாக்கியுள்ள இவர், ‘கிளிகி’ என்கிற கற்பனை மொழியை உருவாக்கிய பின்னணியை நம்மிடம் விளக்கினார்:

“இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, போரை ஒரு தொழிலாகச் செய்யும் காலகேயர்கள் என்கிற கற்பனையான இனக் கூட்டம் பேசும் மொழி அது. பேசப்படும் முறையால் பழங்குடி மொழிகளின் தொன்மை அதில் ஒலிக்க வேண்டும். அந்த மொழியைக் காலகேயர்கள் பேசும்போது, படத்தில் சப்-டைட்டில் போட மாட்டேன். அதற்குப் பதிலாக காளகேயர்கள் பேசுவதை வைத்தே, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக அந்த மொழியின் ஒலியமைப்பும் சொற்களும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் உருவாக்கியதுதான் ‘கிளிகி’. இந்த மொழியின் தனித்துவம் இதில் பயன்படுத்தப்படும் ‘கிளிக்’ ஒலிகள்தான். குறியீடுகளைக் கொண்டு அதையே அம்மொழியின் வரிவடிவமாக உருவாக்கினேன். அதில் 22 குறியீடுகளைப் பயன்படுத்தினேன். அவற்றைக் கொண்டு உங்களால் ‘கிளிகி’ மொழியை எழுத, படிக்க முடியும். இம்மொழியைக் கற்றுக்கொண்டு பேசும்போது, அதன் ஒலியமைப்பு உங்களுக்குக் கேளிக்கை உணர்வைக் கொடுக்கும். ‘பாகுபலி’ படப்பிடிப்புக்கு முன்னர், ‘கிளிகி’ மொழியில் 700 சொற்களையும் 40 இலக்கண விதிகளையும் உருவாக்கிவிட்டேன்” என்கிறார். அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x