Published : 10 Nov 2022 06:34 AM
Last Updated : 10 Nov 2022 06:34 AM

ப்ரீமியம்
விவிலியம்: தலைமைக்குக் கட்டுப்படலாமா?

ஜெயந்தன்

தலைமைப் பண்பும் அதையே தகுதியாகக் கொண்டு உருவாகும் தலைமைப் பொறுப்புமே மனித குலத்தை எல்லாக் காலத்திலும் வழிநடத்தி வந்துள்ளது. தலைமையேற்றல் என்பதில் இருபாலரையும் கடவுள் சமமான இடத்தில் வைத்துள்ளதைப் புனித விவிலியம் எடுத்துக்காட்டுகிறது. ஆனால், அதன்படி பெரும்பாலான மக்கள் நடப்பதில்லை.

நன்மைகளை மட்டுமே செய்யும் கடவுளின் தலைமையை ஏற்க மறுத்தபோது, மனிதன் மனுஷியுடன் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அந்தக் காலந்தொட்டே பெண்களையும் பிள்ளைகளையும் ஏன், சக மனிதர்களையுமேகூட கொடிய முறையில் தன்னலத்துக்காகப் பயன்படுத்தி, கடவுள் தனக்களித்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறான். இவ்வாறு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்களை வானுலகத் தந்தையாகிய கடவுள் வெறுக்கிறார். விவிலியத்தின் இணைவசனப் புத்தக மான ‘மல்கியா’வின் இரண்டாம் அதிகாரம், 13 முதல் 16 வரையிலான வசனத்தைப் படித்துப் பாருங்கள். அதில் ‘கொடுமையில் பிரியமுள்ளவனை என் உள்ளம் வெறுக்கிறது’ என்று கடவுள் சொல்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x