Published : 19 Dec 2024 07:17 AM
Last Updated : 19 Dec 2024 07:17 AM
பகவத் ராமானுஜரின் சீடர்களின் தலைவராகவும், வேதாந்தம் அறிந்தவரில் முதல்வராகவும், கூர குலத்தின் தலைவராகவும் விளங்கும் ஸ்ரீவத்ஸசிங்கர் (ஸ்ரீவத்ஸாங்கர்) என்னும் கூரத்தாழ்வான், குருநாதரின் அனைத்து நற்குணங்களையும் பெற்றிருந்தார். முக்குறும்பு என்று அழைக்கப்படும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு ஆகிய 3 குழிகளையும் கடந்தவராக இருந்தார். குருநாதரை விட 8 வயது மூத்தவராக இருந்தாலும், குருவே சரணம் என்று தமது பணியை நிறைவாகச் செய்தவர்.
கூரேசரின் அவதாரம், ஸ்ரீராம அவதாரத்தின் பிரதிபலிப்பாகவும், அனைத்து நற்புலன்களின் உறைவிடமாகவும் கருதப்படுகிறது. குரு பக்தி மற்றும் குரு - சிஷ்ய உறவின் அருமைகளை வெளிக்காட்டும் ஒரு சிறந்த உதாரணமாக, கூரேசரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. ‘குரு’ என்ற சொல்லுக்கு இருளைப் போக்குபவர் என்று பொருள். உலக வாழ்க்கையில் சூழ்ந்துள்ள இருளை ‘மாய இருள்’ என்று கூறுவதுண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment