Published : 03 Oct 2024 06:40 AM
Last Updated : 03 Oct 2024 06:40 AM

ப்ரீமியம்
முன்வினை பாவங்கள் தீர்க்கும் காஞ்சிபுரம் புண்ணிய கோட்டீஸ்வரர்

காஞ்சிபுரத்தில் உள்ள புண்ணிய கோட்டீஸ்வரர் கோயில், முன்வினை பாவங்கள் தீர்க்கும் தலமாக போற்றப்படுகிறது. திருமால் சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்ற தலம் என்பதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சமயம் திருமால் மேக உரு வம் கொண்டு சிவபெருமானை சுமந்தார். சிவபெருமான் மனமகிழ்ந்து திருமாலுக்கு வரம் அருள்வதாகத் தெரிவித்தார். உடனே திருமால், ஈரேழு உலகங்களையும் பிரம்மதேவரையும் தான் படைக்க வேண்டும் என்றும், அத்தகைய ஆற்றலை தனக்கு அருள வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினார்.

சப்த மோட்ச புரிகளில் ஒன்றாகவும், நகரங்களில் சிறந்ததாகவும் விளங்கும் காஞ்சியம்பதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி, வழிபட்டால் திருமாலின் கோரிக்கை நிறைவேறும் என்று சிவபெருமான் அருளினார். அதன்படி திருமால், காஞ்சி மாநகர் சென்று, தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் தடாகத்தை உருவாக்கி, தினமும் தாமரை மலர்களால் அர்ச்சித்து ஈசனை, ‘வரம் தா வரம் தா’ என்று அழைத்து வழிபட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x