Published : 12 Sep 2024 06:42 AM
Last Updated : 12 Sep 2024 06:42 AM

ப்ரீமியம்
ஓணம் பண்டிகை தொடங்கிய கோயில்

ஓணம் பண்டிகைக்கும், நேந்திரம் பழத்துக்கும் பெயர் பெற்ற கேரள மாநிலத்தில் அமைந்துள்ள திருக்காட்கரையப்பன் கோயில், முன் ஜென்ம வினைகள் நீக்கும் தலமாக போற்றப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் திருவோண உற்சவத்தில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று இறைவனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுவது தனிச்சிறப்பு.

தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக் கென்று வெகு சில கோயில்களே உள்ளன. அவற் றுள் ஒன்று எர்ணாகுளத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம் திருக்காட்கரையப்பன் கோயில் ஆகும். பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். (தாயார் வாத்ஸல்யவல்லி - பெரும் செல்வநாயகி) கபிலர் என்ற மகரிஷி இத்தலத்தில் தவம் புரிந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x