Last Updated : 12 Sep, 2024 06:28 AM

 

Published : 12 Sep 2024 06:28 AM
Last Updated : 12 Sep 2024 06:28 AM

ப்ரீமியம்
வில்லியநல்லூர் நீலமேக பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்‌ஷணம்

மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமேகப் பெருமாள் கோயிலில் செப்டம்பர் 15-ம் தேதி சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, வில்லியநல்லூர் கிராமம், காவிரி நதிக்கு வடக்கில், கொள்ளிடம் ஆற்றுக்கு தெற்கில் அமைந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நீலமேக பெருமாள் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது.

திருமணஞ்சேரியில் நடைபெறவிருந்த சிவபெருமான் - பார்வதிதேவி திருமண வைபவத்துக்கு முன்னதாக சிவபெருமான், வில்லியநல்லூர் தலத்தில் உள்ள ஹோம குளக்கரையில், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் முன்னிலையில் யாகம் செய்தார். விநாயகப் பெருமான் அந்த யாகத்தை நிகழ்த்திக் கொடுத்ததால், இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் (சிவகாம சுந்தரி அம்பாள் சமேத காளீஸ்வரர் கோயில்) இரட்டை விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x