Published : 20 Jun 2024 07:38 AM
Last Updated : 20 Jun 2024 07:38 AM
பெண் நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார், பல தலங்கள்தோறும் சென்று ஈசனை தரிசித்து, பாடல்கள் புனைந்து வழிபட்டார். புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், காரைக்காலில் அவதரித்ததால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறார்.
வளம் நிறைந்த சோழ நாட்டில் காரைக்கால் நகரத்தில் வணிகர் குலத்தவர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் அறநெறி தவறாமல் வாணிபம் செய்து வந்த தனதத்தனார் என்பவருக்கு புனிதவதி என்ற மகள் இருந்தார். சிறு வயதுமுதலே புனிதவதி பக்தி பெருக்கோடு சிவபெருமானை வழிபட்டு வந்தார். தக்க பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் வணிகர் பரமதத்தனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT