Published : 14 Sep 2023 08:54 AM
Last Updated : 14 Sep 2023 08:54 AM
முன்னொரு காலத்தில் யோனா என்கிற இறைத் தூதர் ஒருவர் வாழ்ந்துவந்தார். கடவுள் தரும் செய்தியைச் சம்பந்தப்பட்ட மக்களுக்கு அறிவிப்பது அவரது பணி. அவரது காலத்தில் நினிவே என்கிற பட்டணத்தில் இருந்த மக்கள் மிகவும் தீயவர்களாகவும் ஒழுக்க நெறியிலிருந்து தவறி வாழ்பவர்களாகவும் இருந்தனர். அச்சமயத்தில் கடவுள் யோனாவிடம், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன” என்றார்.
யோனா கடவுளிடமிருந்து தப்பியோட எண்ணி தர்சீஸ் என்கிற ஊருக்குப் புறப்பட்டார். அவர் தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டு, கட்டணம் கொடுத்து, கடவுளிடமிருந்து தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, தர்சீசுக்குப் பயணப்பட்டார். ஆனால் கடவுள் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று. கப்பல் உடைந்துபோகும் நிலை ஏற்பட்டது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த பொதிகளைக்கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனா ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment